சமிந்த விஜேசிறியின் இடத்துக்கு நயன வாசலதிலக!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதையடுத்து வெற்றிடமாகியுள்ள எம்.பி. பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.

அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 31 ஆயிரத்து 307 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமிந்த விஜேசிறி நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.