இலங்கை வந்தார் பிரிட்டன் இளவரசி – யாழ்ப்பாணத்துக்கும் விஜயம்.

பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகளான பிரிட்டன் இளவரசி அன்னே மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸ் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசின் அழைப்பின் பேரில் பிரிட்டன் இளவரசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.