ரயில் மோதி ஒருவர் பரிதாப மரணம்!

புத்தளம் – தில்லையடி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என்று புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.