யாழ். காரைநகரில் நாளை நல்லிணக்க பொங்கல் விழா – நீதி அமைச்சர் பங்கேற்பு.

யாழ்ப்பாணம், காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நடைபெறவுள்ள தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வருகின்றார்.

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் நாளை காலை 10 மணிக்கு இந்தப் பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்தினருடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.