இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் இன்றும் (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம், பேசாலையை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

கைதான 18  மீனவர்களும் மீன்பிடிக்கப் பயன்படுத்திய இரண்டு ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 மீனவர்களும்  மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் நாளை (17) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

  

 

 

 

Leave A Reply

Your email address will not be published.