கோலாட்டம் ஆடிய பெண் மாரடைப்பால் திடீர் மரணம்… சங்கராந்தி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!

கோலாட்டம் ஆடியபோது மாரடைப்பு ஏற்பட்டு பெண் மரணமடைந்தார்.

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள கல்வாள கிராமத்தில் மகர சங்கராந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனை முன்னிட்டு அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் கோலாட்டம் ஆடினர். அப்போது அவர்களில் 40 வயதுடைய ராஜமணி என்ற பெண்ணுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இந்தப் பெண் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.

சங்கராந்தி சமயத்தில் கோலாட்டம் ஆடிய பெண் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.