மொட்டு கட்சி, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை துரத்திய மக்கள்.

புத்தளம் தழுவ கிராமத்தின் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பொதுமக்களின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றுள்ளார்.

மக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இராஜாங்க அமைச்சர் தழுவ சந்தி வரை வந்து திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயதுன்னவும் இணைந்து கொள்ளவிருந்தார்.

ஆனால் இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.