புதிய பொலிஸ் வழிகாட்டுதல்கள்: சாதாரண உடையில் கடமைகளைச் செய்யும்போது சோதனைக்காக வாகனங்களை நிறுத்த முடியாது – காவல்துறை.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமைகளைச் செய்யும்போது சோதனைக்காக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

இப் புதிய அறிவுறுத்தல் தொடர் நேற்று (19) சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாரம்மல பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

அதன் பின்னர் இப் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.