யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 2024ஆம் ஆண்டு மாநாடு நேற்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.

வளர்ந்து வரும் தொழில் முனைவோரை வலுப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை வளர்த்தல் எனும் தொனிப்பொருளில்தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது.

இம்மாநாட்டில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்ததர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா, வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பாலா சுவாமிநாதன், முன்னாள் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி, FITEN அமைப்பின் தலைவர் கௌதம் ராஜன், ஒருங்கிணைப்பாளர்களான ஷான் நந்தகுமார், பார்த்தீபன் பரஞ்சோதி மற்றும் Yarl IT Hub இன் ஒருங்கிணைப்பாளர் சயந்தன், மற்றும் UBL இயக்குநர் ஈஸ்வரமோகன், அமெரிக்கத் தொழிலதிபர் ராஜ் ராஜரத்தினம் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொணடனர்.

உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும், பல வெற்றி பெற்ற தொழில் வல்லுநர்களின் தொழில் அனுபவ மற்றும் அறிவுப் பகிர்வுகள் என்பவற்றுடன் உள்ளூர் தொழில் முனைவோருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் தொழில் முனைவோருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாநாடு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.