மாஸ்கோ நோக்கிச் சென்ற தனியார் விமானம் ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியது.

தாய்லாந்தில் இருந்து இந்தியா வழியாக ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு 6 பேருடன் சென்ற தனியார் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு ஆப்கானிஸ்தானின் படக்ஷான் மாகாணத்தில் உள்ள மலைத்தொடரில் மோதி விமானம் விபத்துக்குள்ளாகி அழிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் விமானம் என்று கூறியுள்ள ரஷ்ய விமான போக்குவரத்து ஆணையம், விபத்தின் போது அதில் 6 பேர் இருந்ததை உறுதி செய்துள்ளது. உஸ்பெகிஸ்தான் ஊடாக மொஸ்கோ நோக்கி பயணித்த விசேட விமானம் விபத்திற்கு முன்னர் ரேடார் அமைப்பில் இருந்து காணாமல் போனதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.