பவதாரணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்கு! – கொழும்பு வந்தார் யுவன் சங்கர் ராஜா.

இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணியின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகருமான பவதாரணி உடல்நலக்குறைவால் நேற்று இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47.

பவதாரணி கடந்த 5 மாதங்களாகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று கூறப்படுகின்றது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்திருந்த அவர், இங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையிலேயே நேற்று மாலை கொழும்பில் காலமானார்.

சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக பவதாரணியின் சகோதரர் யுவன் சங்கர் ராஜாவும் மற்றும் உறவினரான வெங்கட் பிரபும் இன்று அதிகாலை கொழும்பு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு வந்த இளையராஜாவுடன் தற்போது தங்கியுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஜயவர்த்தன மலர்ச்சாலையில் பவதாரணியின் பூதவுடல் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இளையராஜாவால் கொழும்பில் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியும் பிற்போடப்பட்டுள்ளது.
இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்: உடல் நாளை சென்னைக்கு …..

More News
சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று ஆராச்சிக்கட்டுக்கு…….

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடியது.

ரயில்வே சிற்றுண்டிசாலைகளில் அவசர ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிவு.

பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாட்டுக்கு சென்ற ஆஸ்திரியர் விபத்தில் உயிரிழந்தார்.

வீரதீர செயல்கள் புரிந்த குடிமக்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

குடியரசு தினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

கூட்டமைப்பை மீண்டும் உருவாக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்! – சிறீதரன் அறிவிப்பு.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடக்கவே சாத்தியம்! – இதிலும் கட்சியின் மரபு மாறுவதற்கு வாய்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.