குடியரசு தினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றினார்.

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மேலும், குடியரசு தின விழாவில் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவருக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலதிக செய்திகள்

சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஜயரத்ன மலர் சாலையில் (வீடியோ)

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்: உடல் நாளை சென்னைக்கு …..

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடக்கவே சாத்தியம்! – இதிலும் கட்சியின் மரபு மாறுவதற்கு வாய்ப்பு.

கூட்டமைப்பை மீண்டும் உருவாக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்! – சிறீதரன் அறிவிப்பு.

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

Leave A Reply

Your email address will not be published.