இன்றும் கோர விபத்து! மூவர் பரிதாப மரணம்!!

குருநாகல், நாரம்மல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாரம்மல விகாரைக்கு அருகில் உள்ள வளைவு பகுதியிலேயே இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டோவும் லொறியும் மோதியில் ஓட்டோவில் பயணித்த நால்வரில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.