சுதந்திரக் கொண்டாட்டத்தின் பயிற்சி நடவடிக்கைகளின் போது இரண்டு பராட்ரூப்பர்கள் காயம்.

சுதந்திரக் கொண்டாட்டத்தின் பயிற்சி நடவடிக்கைகளின் போது விபத்துக்குள்ளான பராட்ரூப் வீரர்களின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன் படையினரின் நலன்களையும் கேட்டறிந்தார்.

இன்று (30) காலை சுதந்திர தின ஒத்திகையில் கலந்து கொண்ட பாதுகாப்பு படையினர் நான்கு பேர் பரசூட் ஷோ ஒத்திகையின் போது தரையில் விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் இரண்டு இராணுவ பராட்ரூப்பர்களும் இரண்டு விமானப்படை பராட்ரூப்பர்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பராட்ரூப் வீரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.