போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை எமது புலனாய்வுப் பிரிவினர் அறிவர் – ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் போது தாக்கப்பட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது கட்சியின் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவருக்கும் எதிராக மனித உரிமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அவர் கூறினார்.

வரலாற்றில் முதன்முறையாக முக்கிய எதிர்க்கட்சி மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.