ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.

ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ஆரம்பித்த வேலைநிறுத்தத்தின் விளைவாக, பிராங்பேர்ட், பெர்லின் மற்றும் முனிச் உள்ளிட்ட 11 முக்கிய விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் 200,000 விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80% வருகை மற்றும் புறப்பாடு பயணங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.