ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் பாதுகாப்புக் கடவையைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் ரயில் நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான ரயில் கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையைக் கடக்க முற்பட்டவரையே ரயில் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முயன்ற விநாயகர்புரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான மதன் என்பவரே உயிரிழந்துள்ளார்

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.