நாடளாவிய ரீதியில் காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேக நபர்கள் கைது.

நாடளாவிய ரீதியில் இன்று (05) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களில் 03 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 07 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 108 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 09 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 97 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வரும் 02 சந்தேக நபர்களும் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.