பெலியத்த ஐவர் கொலைச் சம்பவத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதியில் 05 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள், ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்து பெலியத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய கட்டுடம்பே, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இவர் இச்சம்பவத்தில் 11வது சந்தேகநபர் ஆவார்.

இறந்தவர்களில் எமது ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவார். சமீர மதுசங்க, ஹசித சின்சுக, புத்திக ராஜபக்ஷ மற்றும் நளின் சம்பிக்க ஆகிய நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் காலி வித்யாலோக பிரிவெனாவிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை புலனாய்வு குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.