ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக ஜனாதிபதி இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விஜயத்தில் இணைந்து கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி ஆராயவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.