கொழும்பில் வீடொன்றில் இருந்து இரு வயோதிபர்கள் சடலங்களாக மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.

கொழும்பில் வீடொன்றில் இருந்து இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மிரிஹானை, ஜுபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இன்று இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 80 வயதுடைய ஆணும், 96 வயதுடைய பெண்ணும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வயோதிபர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கை மரணமா? என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.