கேரள கஞ்சா, மதுவுடன் மூவர் வசமாகச் சிக்கினர்!

பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை – ரத்மலவின்ன பகுதியில் இருவரும், கல்தொட்ட – இலுக்பெலஸ்ஸ பகுதியில் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 24 கிராம் கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானம் மற்றும் அவற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்த மூவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.