மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீகே பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

வறுமையால் மின் கட்டணம் செலுத்தாததால், மேற்படி குடும்பஸ்தரின் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் அயல் வீடுகளில் இருந்தே மின் இணைப்பைப் பெற்று மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவர் மின் இணைப்பைப் பெற முற்பட்டபோதே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.