வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவர் வெட்டிக்கொலை!

மினுவாங்கொடை – யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர், வீட்டில் இருந்தவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் மூவர் அடங்கிய கொள்ளைக் குழு குறித்த வீட்டுக்குள் கொள்ளையிடும் நோக்கில் நுழைந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கொள்ளையர்களில் ஒருவரை வீட்டில் இருந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டினார் என்று கூறப்படுகின்றது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றைய இரண்டு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.