மடுவில் விசேட அதிரடிப் படை சுற்றிவளைப்பு! – கோடா, கசிப்புடன் இருவர் கைது.

மடு, பண்டிவிரிச்சான் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மடு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் உள்ள விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விசேட அதிரடிப் படைக் கொமாண்டர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் நெறிப்படுத்தலில், விசேட அதிரடிப் படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொடித்துவக்குவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் மடு, பண்டிவிரிச்சான் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, காட்டுப் பகுதியில் ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட பொருட்களுடன் மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரகைளை மடுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.