துப்பாக்கி வெடித்து குடும்பஸ்தர் மரணம்! – முல்லைத்தீவில் துயரம்.

முல்லைத்தீவு – குமுழமுனை, தண்ணிமுறிப்பு காட்டுப் பகுதியில் இன்று அதிகாலை வேட்டைக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கியை இயக்க முயன்றபோது அது வெடித்ததில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.