யாழில் ஐஸ்கிறீமுக்குள் தவளை! – சுகாதாரப் பரிசோதகர்களால் தீவிர விசாரணை.

யாழ்ப்பாணத்தில் குளிர்களி (ஐஸ்கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் விற்கப்பட்ட குளிர்களியில் தவளை ஒன்று காணப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செல்வச்சந்நிதி முருகன் கோயில் சூழலில் உள்ள குளிர்களி விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று ஒருவர் குளிர்களி ஒன்றை வாங்கிய வேளை அதனுள் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகளவான வெப்பமான காலநிலை நிலவுவதால் சந்நிதி ஆலயத்துக்குச் செல்வோர் குளிர்பானங்களை அருகில் உள்ள உணவங்கள் மற்றும் குளிர்களி விற்பனை நிலையங்களிலேயே கொள்வனவு செய்து பருகி வருகின்றனர்.

அந்நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் குளிர்களி விற்பனை நிலையங்களின் சுகாதாரம் மற்றும் நீரின் தூய்மை என்பவை தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் கவனம் செலுத்தி, சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.