பாலியல் சீண்டலை கண்காணிக்க சென்ற, பெண் போலீஸை சீண்டியவர் கைது

சிறுவர் மற்றும் பெண்கள் வன்முறை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிவில் உடையில் பஸ்ஸில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (17) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்காதானியிடம் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இம்மாதம் 22ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

வெலிமடையில் வசிக்கும் தனியார் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவிலிருந்து வெலிமடை வரை இயங்கும் பஸ்ஸில்  நீதி நடவடிக்கையுடன் , சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கைக்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்.

பஸ்ஸில்,  மேலும் சிவில் உடையில் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், சந்தேக நபர் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை , பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அதன்போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியே தெரிவித்தார்.

பாலியல் சீண்டலை கண்காணிக்க சென்ற, பெண் போலீஸை சீண்டியவர் கைது

மாலைதீவின் வெளிநாட்டு கடன் நெருக்கடி குறித்து ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.