அனுராதா யஹம்பத் , திலித்தின் கொழும்பு மேடையில் …..

முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத், தொழில்முனைவோர் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சிக்கு ஆதரவாக, தொழில் முனைவோர் அரசை கட்டியெழுப்ப தனது அரசியல் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாக அறிவித்தார்.

மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்குவதற்கான தொழில் முனைவோர் அரசை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த மாநாடு நேற்று (17) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட மக்களிடம், இலங்கையில் மிகப்பெரிய தீர்க்கமான அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர உறுதியளித்தார்.

கடந்த சில மாதங்களாக பல மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.