மன்னார் கீரி கடற்கரை பகுதியில் தூய்மையாக்கல்..

சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தினை முன்னிட்டு மன்னார் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தின் அனுசரனையில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில்  புதன் கிழமை(23.09.2020) காலை 7.30 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இணைந்து கீரி கடற்கரையினை தூய்மையாக்கும் செயல்திட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பொலிஸார், இராணுவம், கடற்படை, வான்படையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் ஆகியோர் இணைந்து கீரி கடற்கரையில் மாபெரும் சிரமதான பணியை மேற்கொண்டனர்.

இதன் போது மன்னார் மேலதிக அரசாங்க அதிபர்,மன்னார் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு கரையோர தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.