போலி விசாக்களுடன் நால்வர் சிக்கினர்!

ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவைத் தரகர் ஒருவரிடம் கொடுத்து மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி 4 பேரும் இன்று (25) பஹ்ரைன் வழியாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி 4 பேரும் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.