மஹிந்த களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க மக்கள் தயார் – மொட்டுக் கட்சி எம்.பி. ரோஹித கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவை நேசிக்கும் மக்களே இந்நாட்டில் உள்ளனர். அவர் களமிறக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எமது தரப்புக்குச் சவால் அல்ல. ஏனெனில் அக்கட்சியின் தலைவரிடம் தலைமைத்துவப் பண்பு கிடையாது. இதை நாம் கூறவில்லை. அக்கட்சியின் உறுப்பினர்கள்தான் குறிப்பிட்டு வருகின்றனர் .

நாம் களமிறக்கியுள்ள அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இம்முறையும் வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார், மஹிந்த ராஜபக்ஷ பெயரிடும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.