எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லொரி வெடித்து 25 பேர் பலி.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லொரி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

அங்குள்ள லகோஜா என்ற இடத்தில் எரிபொருளை ஏற்றிக் கொண்டு டேங்கர் லொரி சென்று கொண்டிருந்தது.

அப்போது லாரியின் பிரேக் பழுதானதால், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதியது.

இதனால் எரிபொருள் கொட்டியதில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.