நாயாறு கடலில் கரை ஒதுங்கிய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) முல்லைத்தீவு நாயாறு கடலில் நீராடச் சென்ற போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட நபரின் சடலத்தை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நாயாறு கடலில் உல்லாசமாக 5 பேர் கொண்ட குழு நீராடிக் கொண்டிருந்த போது இருவர் நீரில் மூழ்கிய நிலையில் கடற்படையினரும் நாயாறு மீனவர்களும் ஒருவரை மீட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தேடுதலின் போது காணாமல் போன மற்றைய மீனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு கொடிகம்மம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசுந்தரம் பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாயாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.