சுற்றுலாத்துறை தொடர்பான உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி.

சமூக மட்ட அடிப்படையிலான சுற்றுலாத்துறை தொடர்பான உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.

இலங்கைக்கான அவுஸ்த்திரேலியா உயர்ஸ்த்தானிகர் டேவிட் ஹொல்லி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சிகளை நிறைவுசெய்த 26 பேருக்கு இதன்போது சுற்றுலா வழிகாட்டிக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அடையாள அட்டை இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான நிதி உதவியை அவுஸ்த்திரேலியன் எய்ட் நிறுவனம் வழங்கியது.இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ், கிழக்கு மாகாண சுற்றுலாபணியகத்தின் தலைவர் ஹரிபிரதாப் ,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.