மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் பலி!

மத்திய பிரதேசம் திண்டோரி மாவட்டத்தில் வேன் கவிழ்ந்ததில் 14 பேர் வியாழக்கிழமை காலை உயிரிழந்தனர்.

திண்டோரி மாவட்டம் ஷாப்புரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் திருமணத்துக்கு சென்றுவிட்டு 35-க்கும் மேற்பட்டோர் வேனில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகீழாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பலியாகினர்.

மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், நிதியுதவியாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகள்

ரயில் மோதி தண்டவாளத்தில் நின்றிருந்த 12 பேர் பலி… ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

Leave A Reply

Your email address will not be published.