சகல தனியார் பஸ் சேவைகளும் வடக்கில் முற்றாக இடைநிறுத்தம் – வெறிச்சோடிக் காணப்படும் பஸ் நிலையங்கள்.

யாழ்ப்பாணத்தில் இன்று உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பஸ் சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பஸ்கள் சேவையை முன்னெடுத்த நிலையில் நொடுந்தூர பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால், இன்று உள்ளூர் மற்றும் நெடுந்தூர பஸ் சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணத்தில் முறையான பஸ் தரிப்பிடம் இல்லாததால் நேற்று முதல் தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் நேற்றுமுன்தினம் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.