இ.போ.ச. பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தனியாா் பஸ் உாிமையாளா்கள் போராட்டம் – யாழ்ப்பாணத்தில் பயணிகள் பெரும் அசௌகரியம்.

யாழ்ப்பாணத்தில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தனியாா் பஸ் உாிமையாளா்கள் இன்று இ.போ.ச. பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையான பஸ் தாிப்பிடம் இல்லாமையைக் கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்ட துார தனியாா் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் தனியாா் போக்குவரத்துச் சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பஸ் சாரதிகள், நடத்துனா்கள் யாழ். மத்திய பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து இ.போ.ச. பஸ்களும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகாியங்களைச் சந்தித்தனா்.

பொலிஸாா் தலையிட்டு சில இ.போ.ச. பஸ்களை முற்றுகையிலிருந்து விடுவித்த போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தனியாா் பஸ் உாிமையாளா்களின் கோாிக்கை தொடா்பாக பேசுவதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநா் மற்றும் அரச அதிபரை சந்திக்க அழைத்துச் சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.