முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதியதில் ஒருவர் மரணம் – இருவர் படுகாயம்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செம்மலையைச் சேர்ந்த 54 வயதான நாகராசா யோகராசா என்பவர் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது.

குமுழமுனை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து விபத்தை ஏற்படுத்தினார்கள் என்று கூறப்படுபவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமன் ரத்நாயக்கவுக்கு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி

நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடல் உறவுகளிடம் கையளிப்பு!

கேரள மாணவர் மரணம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம்

Leave A Reply

Your email address will not be published.