சமன் ரத்நாயக்கவுக்கு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு தொடர்பில் அவர் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து சமன் ரத்நாயக்கவிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
..

Leave A Reply

Your email address will not be published.