சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை தொடர்பான மீளாய்வு பணிகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் திரு. ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

அதன்படி, மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

03வது தவணையை அணுகுவதற்கு வழிவகை செய்யும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.