இந்திய மீனவர்கள் 22 பேர் கைது!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் அவர்கள் பயணித்த மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே நேற்று இரவு 22 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள், காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அவர்களை விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.