எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று அதிகாலை கைது!

யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளையே கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு படகில் 12 மீனவர்களும், மற்றைய படகில் 7 மீனவர்களும் எல்லை தாண்டிய வேளை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    இந்திய மீனவர்கள் எல்லை மீறப்படுகிறது நல்லதில்லை அத்தோடு இந்தியக் கடலோரப்படை என்ன செய்கிறது படைகளால் இந்திய மீனவர்களை தடுத்து எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ளவும் இது இந்தியப் படைகளின் கடமை எல்லை மீறும் இந்திய மீனவர்களை உடனடிமாகக் கைது செய்யவும்

Leave A Reply

Your email address will not be published.