இந்தியா கூட்டணி பொதுக் கூட்டம்: மும்பை புறப்பட்டார் முதல்வர்!

மணிப்பூரில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயணம் 14 மாநிலங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மும்பையில் நடைபெறும் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்றிரவே மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர்.

மேலதிக செய்திகள்

யாழ். சாட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி பரிதாப மரணம்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் யாழ். விஜயம்!

ஐக்கிய மக்கள் சக்திக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவுமாம் – எஸ்.பி. ஆரூடம்.

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று அதிகாலை கைது!

தமிழில் புகார் அளிக்க காவல்துறை அவசர எண் 107.

2026க்கு பின்னர் கல்வியில் தோல்வியடையா பாஸ் மட்டும்!

Leave A Reply

Your email address will not be published.