தூக்கில் தொங்கிய ஆண் வைத்தியசாலையில் சாவு – இருபாலையில் சம்பவம்.

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்துத் தூக்கில் தொங்கிய ஆணொருவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.

இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேற்படி நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் இன்று (17) தூக்கில் தொங்கியுள்ளார். இதன்போது அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

அங்கு சேர்ப்பிக்கப்பட்ட மேற்படி நபர் சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.