கோப் குழுவில் இருந்து டிலானும் விலகல் – இதுவரை 11 பேர் இராஜிநாமா.

கோப் எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் விலகியுள்ளார்.

கோப் குழுவின் தலைமைப் பதவிக்கு மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தெரிவித்து நேற்று வரை 10 எதிரணி எம்.பிக்கள் மேற்படி குழுவில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையிலேயே எதிரணி எம்.பி. டிலான் பெரேரா இன்று கோப் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார்.

இதுவரை மொத்தமாக 11 எதிரணி எம்.பிக்கள் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளனர்.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, தயாசிறி ஜயசேகர, சரித ஹேரத், இரா.சாணக்கியன், ஹேஷா விதானகே, காமினி வலேபோட, எஸ்.எம். மரிக்கார், வசந்த யாப்பா பண்டார, துமிந்த திஸாநாயக்க, அநுரகுமார திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.