ஐந்து விசைப்படகுகளுடன் இந்திய மீனவர்கள் 32 பேர் சிறைப்பிடிப்பு.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடித்த 32 இந்திய மீனவர்களை ஐந்து விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை பிடித்துள்ளது.

தமிழக மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 7 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.