முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள் – மஹிந்த.

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (21) பசில் ஜனாதிபதியை சந்தித்த போதே பசில் ராஜபக்ஷ இந்த யோசனையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்தாவிடின் ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது பாராளுமன்ற தேர்தலில் பாரியளவில் வெற்றி பெறும் எனவும் அது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு நாட்டில் நியாயமான சூழல் ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.