அரசியல் கூட்டணியா? மே மாதத்துக்கு பின் வாருங்கள்! – எதிர்க்கட்சிகளிடம் சந்திரிகா அறிவுறுத்து.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார்.

மே மாதத்துக்குப் பின்பே தேர்தல் விடயங்கள் சூடு பிடிக்கும் என்றும், அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பில் செயலில் இறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை தெற்கு ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
.

Leave A Reply

Your email address will not be published.