திடீர் பால் தட்டுப்பாடு – வருத்தம் தெரிவித்த ஆவின் நிர்வாகம்!

சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிர்வாகத்திற்கும் பால் பாக்கெட் விநியோகம் செய்யக்கூடிய வாடகை வாகன ஒப்பந்ததாரர்களுக்கு இடையே பால் விநியோகத்திற்க்கு கொடுக்கப்படும் தொகை கடந்த 15 நாட்களாக குறைத்து வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகஸ்தர்கள் இயக்கக்கூடிய லாரிகள் வெளியே செல்லாமல் போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு பால் விநியோகம் தாமதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆவின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சென்னை முழுவதும் பொதுமக்கள் விரும்பி பருகும் ஆவின் பால் விநியோகம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் ஒரு சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இருப்பினும் காலதாமதத்திற்கு ஆவின் நிர்வாகம் வருந்துகிறது. இந்த சூழ்நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

மேலதிக செய்திகள்

வடக்கில் கடந்த வருடம் 52 பேர் படுகொலை!

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மொட்டுக் கட்சி சூளுரை.

சிங்கப்பூர்க் கப்பல் மோதி பாலம் ஆற்றில் விழுந்தது : மீட்பு நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கலாம்.

கொரில்லா வேடத்தில் குரங்குக் கூட்டத்தை விரட்டியடிக்கும் ஊழியர்கள்

2024 அக்டோபர் 5ம் தேதி ஜனாதிபதி தேர்தல்

திடீர் பால் தட்டுப்பாடு – வருத்தம் தெரிவித்த ஆவின் நிர்வாகம்!

Leave A Reply

Your email address will not be published.